ADDED : பிப் 24, 2026 01:30 AM

பங்கு சந்தை புரோக்கர்கள், வங்கிகளிடம் கடன் வாங்குவது மற்றும் பிணை வைப்பது தொடர்பான புதிய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று, நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பங்கு தரகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பதில், சொந்த லாபத்திற்காக செய்யும் வர்த்தகத்துக்கு வங்கிகளிடமிருந்து கடன் வாங்க முடியாது என, இந்த மாதத்தின் துவக்கத்தில் ரிசர்வ் வங்கி கடுமையான விதிகளை அறிவித்திருந்தது.
இதனால் தங்களுக்கு பண நெருக்கடி ஏற்படுவதோடு, லாபம் குறையும் என்று கூறி, புரோக்கர்கள் சங்கம் இந்த விதிகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரியிருந்தது.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ''இந்த விதிகள் திடீரென அறிவிக்கப்படவில்லை; அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகே முடிவு செய்யப்பட்டது.
''எனவே, வரும் ஏப்ரல் 1 முதல் அமலாவதில் எந்த மாற்றமும் இல்லை' என திட்டவட்டமாக தெரிவித்தார்.

