ADDED : மார் 09, 2026 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த ற்போதைய போர் பதற்றம் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மார்ச் 2 - 6ம் தேதி வரை மட்டும் கிட்டத்தட்ட 21,160 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிஉள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இவர்கள் கிட்டத்தட்ட 22,615 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருந்தனர்.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 90 டாலரை தாண்டியிருப்பது, ரூபாயின் பலவீனம், அமெரிக்க பாண்டு மார்க்கெட் வட்டி உயர்வு மற்றும் வரவிருக்கும் நான்காவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் சுமாராகவே இருக்கும் என்ற கணிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாக தெரிகிறது.

