ADDED : மார் 06, 2026 01:32 AM
'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' என்ற குறியீட்டின் அடிப்படையில் இனி 'எப் அண்டு ஓ' வர்த்தகத்தை பி.எஸ்.இ., மேற்கொள்ள 'செபி' அனுமதி வழங்கியுள்ளது. இந்த செய்தியை தொடர்ந்து, பி.எஸ்.இ., நிறுவன பங்குகள் நேற்று 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
'சென்செக்ஸ் 30' குறியீட்டில் உள்ள முதல் 30 பெரிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக உள்ள, சந்தையில் அதிக பணப்புழக்கம் கொண்ட மற்றும் பெரிய சந்தை மதிப்புள்ள 30 நிறுவனங்கள் 'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' குறியீட்டுக்குள் வரும்.
இந்த அறிவிப்பால், நேற்று வர்த்தகம் முடியும்போது, பி.எஸ்.இ., பங்கு விலை 5.49 சதவீதம் அதிகரித்து 2,771 ரூபாயானது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த பங்கு கிட்டத்தட்ட 93 சதவீதத்துக்கும் மேலான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

