தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த செபியின் 2 புதிய தளங்கள் அறிமுகம்

 சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த செபியின் 2 புதிய தளங்கள் அறிமுகம்

 சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த செபியின் 2 புதிய தளங்கள் அறிமுகம்


ADDED : ஆக 20, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 02:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப ங்கு சந்தை சார்ந்த நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், 'இன்சிடென்ட் ரிப்போர்ட்டிங் போர்டல்' மற்றும் 'சைபர் சுரக் ஷா போர்டல்' ஆகிய 2 புதிய தளங்களை செபி அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்சிடென்ட் ரிப்போர்ட்டிங் போர்டல் வாயிலாக சந்தை நிறுவனங்கள், சைபர் பாதுகாப்பு சம்பவங்களை விரைவாகவும், ஒரே மாதிரியான முறையிலும் செபியிடம் தெரிவிக்க முடியும். இது நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் (எப்.எஸ்.பி.,) அறிக்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சைபர் சுரக் ஷா போர்டல் வாயிலாக சைபர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு குறைபாடுகள், கொள்கை நடவடிக்கைகள் மற்றும் சைபர் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் மைய தளமாக செயல்படும்.

சைபர் தாக்குதல்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து அதன் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள், மூன்றாம் தரப்பினர் அல்லது தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதால், தனிப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பை மட்டுமின்றி, முழு சந்தை அமைப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம் என செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவால் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்ந்து கண்டறிந்து சரிசெய்வதிலும் செபி கவனம் செலுத்துகிறது. குவான்டம் கம்ப்யூட்டிங் வாயிலாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை
பங்குச்சந்தையின் புதிய அறிமுகமான ' சி.ஏ.எஸ்.,' முறையை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செபி தலைவர் துஹின் காந்த பாண்டே எச்சரித்துள்ளார். முந்தைய 'வி.டபிள்யூ.ஏ.பி.,' முறையை விட இதில் முறைகேடுகளை எளிதாக கண்டறிய முடியும் என்றும், வெளிப்படைத்தன்மைக்காக கொண்டு வரப்பட்ட இச்சீர்திருத்தம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்த அவர், மியூச்சுவல் பண்டுகள் பங்கேற்பு அதிகரித்து வரும் ஆகஸ்ட் 3ல் அறிமுகமான இதில் முறைகேடு எதுவும் கண்டறியப்படவில்லை. வர்த்தக நேர இறுதியில் ஒரே மாதிரியாக பரிவர்த்தனை செய்யப்படுவதால் இறுதி பங்கு விலையை வெளிப்படையாக நிர்ணயிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us