ADDED : பிப் 24, 2026 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பி .எம்.எஸ்., எனப்படும் போர்ட்போலியோ மேலாண்மை சேவைகளுக்கான விதிமுறைகளில் விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என, செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள், வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
பி.எம்.எஸ்., சேவைகள் துறை சார்ந்த கருத்தரங்கு ஒன்றில் பாண்டே பேசியதாவது:
இத்துறையில் முதலீட்டாளர்களுக்கான வெளிப்படைத்தன்மை மேம்பட்டுள்ள போதிலும், தற்போதுள்ள விதிமுறைகளை புதிய கோணத்தில் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் விரிவாக மறுஆய்வு செய்து வருகிறோம்; இதில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான விதிகள் மற்றும் செட்டில்மென்ட் விதிமுறைகளும் அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

