ADDED : நவ 20, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கி உள்ளிட்ட நிதித்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள '1600' என்ற எண்ணை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை, டிராய் அறிவித்துள்ளது. வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பங்கு தரகு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களும் இந்த எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மோசடி அழைப்புகளில் சிக்குவதை தடுக்கவும், உண்மையான சேவைகளை அடையாளம் காணவும் இது உதவும் என, டிராய் கூறியுள்ளது.

