உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 17, 2026 03:51 AM

அ நிறம் | அளவு
நடப்பு 2026ம் ஆண்டில் ஐ.பி.ஓ., வெளியீடு சற்று மந்தமாக உள்ளதாக 'எக்குயிரஸ் கேபிட்டல்' நிறுவன ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது
*நடப்பாண்டில் இதுவரை 23 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன
*கடந்த 2025ம் ஆண்டில், 103 நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வாயிலாக 1.76 லட்சம் கோடி ரூபாய் திரட்டியிருந்தன
*செபியின் ஒப்புதல் மற்றும் பரிசீலனையில் , மேலும் 236 நிறுவனங்களின் ஐ.பி.ஓ., விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன
*அன்னிய முதலீடுகள் குறைந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு வாயிலாக முதலீடு செய்வதால், பங்குச்சந்தை வலுவாக உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
