UPDATED : அக் 17, 2025 12:44 AM
ADDED : அக் 17, 2025 12:42 AM

இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன் அதிகரித்துள்ளதாக, 'டெலாய்ட் கன்ஸ்யூமர் சிக்னல்ஸ் இந்தியா 2025' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
பயணம், வாகனம் மற்றும் லைப்ஸ்டைல் சார்ந்த விஷயங்களில் செலவு செய்வது அதிகரித்து வருவதாகவும்; அதே நேரத்தில் தங்களின் வேலை மற்றும் பொருட்களின் விலை குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
பிற முக்கிய தகவல்கள்:
* 70%
நகர்ப்புறங்களைச் சேர்ந்த குடும்பங்கள், கொரோனாவுக்கு முன்பைக் காட்டிலும் தற்போது அதிகம் சேமிப்பதாக தெரிவித்துள்ளன
* 62%
அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்கு, பயணங்கள், மின்னணு பொருட்கள் மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ள குடும்பங்களின் சதவீதம்
* 33%
வீட்டு உணவை வீணாக்குவதை தவிர்த்து சேமிப்பதாக தெரிவித்துள்ள குடும்பங்களின் சதவீதம்
* 2%
நல்ல அனுபவத்தை தரும் பயணங்களுக்கு கூடுதலாக செலவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள தொகையின் சதவீதம்
*103.60
புள்ளிகள்
சர்வதேச நிதி நலன் குறியீடு
110.30
புள்ளிகள்
இந்தியாவின் நிதி நலன் குறியீடு