ADDED : நவ 29, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ ந்தியாவில் அடுத்தாண்டு துவக்கத்தில், விலைமதிப்புமிக்க உலோகங்கள் வர்த்தக சேவையை துவக்க உள்ளதாக, அமெரிக்க நிதிச்சேவை நிறுவனமான 'ஸ்டோன்எக்ஸ்' அறிவித்துள்ளது.
கமாடிட்டி, பத்திரங்கள் மற்றும் போரக்ஸ் ஆகியவற்றுக்கான வர்த்தக சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளாக துபாய் மற்றும் கிப்ட் சிட்டி வழியாக, இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. புதிய வசதியின் வாயிலாக, இந்தியாவில் தங்க வர்த்தகத்தில் இறங்க உள்ளது.
இது தவிர, மும்பை, பெங்களூரில் மோசடி தடுப்பு நிபுணர்கள் உள்ளிட்டோரை பணியமர்த்தவும், நிதி டெரிவேட்டிவ்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.

