ரூபாய், பத்திர சந்தைகளுக்கு கிடைத்த தற்காலிக நிம்மதி
ரூபாய், பத்திர சந்தைகளுக்கு கிடைத்த தற்காலிக நிம்மதி
ADDED : மே 26, 2026 01:08 AM

அ மெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை சாதகமாக நகர்வதாலும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாலும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மற்றும் கடன் பத்திர சந்தைகளுக்கு தற்காலிக நிம்மதியை தந்துள்ளது.
கடந்த வாரம் ரூபாய் மதிப்பு 96.96 என்ற இதுவரை இல்லாத வீழ்ச்சியை சந்தித்த நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் நேற்று 95.26ஆக மீட்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு மீட்சி ஆகிய சாதகமான சூழலால், இந்திய அரசு பத்திரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.இதனால், 10 ஆண்டுகால அரசு பத்திரங்களின் மதிப்பு அதிகரித்து, அதற்கான வட்டி 7.02 சதவீதமாக குறைந்துள்ளது.
இதற்கிடையில், வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தவும் இன்று ரிசர்வ் வங்கி 5 பில்லியன் டாலர் அதாவது, 47,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலத்தை நடத்துகிறது.
