ADDED : பிப் 21, 2026 09:06 AM

டிரம்ப் விதித்த இறக்குமதி வரி உத்தரவு செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததை அடுத்து திங்களன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காணுமா; முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
சந்தை உயரவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மென்பொருள், ஏ.ஐ., தகவல்தொழில்நுட்பம் தவிர, அமெரிக்க ஏற்றுமதி சார்ந்த பிற துறைகளின் குறியீடுகள் திங்கள் அன்று வர்த்தகத்தின்போது உயரலாம். குறிப்பாக ஜவுளி, ஜூவல்லரி, ரீடெய்ல் சார்ந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம்.
இருப்பினும், வரி பிடித்தத்தை திருப்பித் தருவது தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் சரியான விளக்கத்தை தராதது, அமெரிக்க அதிபருக்கான வேறு வழிகள் போன்றவை காரணமாக, முதலீட்டாளர்கள் சற்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவிதுள்ளனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கிப்ட் நிப்டி குறியீடு வெள்ளியன்று கிட்டத்தட்ட 240 புள்ளிகள் உயர்ந்து, 25,790ஐ தாண்டி வர்த்தகமானது. அதே போல அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளான நாஸ்டாக் மற்றும் டவ்ஜோன்ஸ் ஆகியவையும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

