பி.எப்., தகவல்களை பெற இனி, 'வாட்ஸ் ஆப்' வசதி இ.பி.எப்.ஓ., அறிமுகம்
பி.எப்., தகவல்களை பெற இனி, 'வாட்ஸ் ஆப்' வசதி இ.பி.எப்.ஓ., அறிமுகம்
UPDATED : செப் 15, 2026 03:01 AM
ADDED : செப் 15, 2026 02:46 AM

இ. பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அவசியமான தகவல்களையும் உடனுக்குடனான அறிவிப்புகளையும் பெறுவதற்காக, அதிகாரப்பூர்வ வாட்ஸ் -ஆப் சேனலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
எது கிடைக்காது? இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்-ஆப் சேனல் வாயிலாக, பி.எப்., சேவைகள், புதிய விதிமுறை மாற்றங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ள முடியும். பிற இணையதளங்களை தேட வேண்டிய அவசியமின்றி, வாட்ஸாப்பிலேயே இத்தகவல்கள் கிடைக்கும்.
இருப்பினும், இது பொதுவான தகவல்களை வழங்கும் ஒரு தளம் மட்டுமே என்பதால், இதன் வாயிலாக தனிப்பட்ட கணக்கு இருப்பை சரிபார்ப்பதோ, முன்பணம் மற்றும் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பதோ முடியாது; மேலும் தனிப்பட்ட குறைகளை தீர்க்கும் உரையாடல் தளமாகவும் இதை பயன்படுத்த இயலாது.
