தேசிய பங்கு சந்தையின் ஐ.பி.ஓ., யாருக்கு என்ன லாபம்?
தேசிய பங்கு சந்தையின் ஐ.பி.ஓ., யாருக்கு என்ன லாபம்?
UPDATED : ஜூன் 19, 2026 01:18 AM
ADDED : ஜூன் 19, 2026 12:42 AM

தேசிய பங்கு சந்தை 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா ஐ.பி.ஓ.,வை வெளியிட செபியிடம் அனுமதி கேட்டு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாக இது உருவெடுக்க உள்ளது.
ஏற்கனவே 2016ஆம் ஆண்டிலேயே பங்கு வெளியீட்டுக்கு வர என்.எஸ்.இ., முயற்சி மேற்கொண்டிருந்தது. ஆனால், பல்வேறு சட்ட மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களால் அந்த முயற்சி தொடர்ந்து தாமதமானது.
![]() |
இதன் காரணமாக, நீண்ட காலமாக முதலீடு செய்திருந்த பங்குதாரர்களின் முதலீட்டு மதிப்பு காகிதத்தில் மட்டுமே உயர்ந்த நிலையில் இருந்து, அதை பணமாக்க முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், தற்போதைய ஐ.பி.ஓ., அறிவிப்பானது, 30 ஆண்டுகளாக காத்திருந்த முதலீட்டாளர்களின் பொறுமைக்கும், சந்தை வளர்ச்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.
என்.எஸ்.இ., முன்மொழிந்துள்ள இந்த ஐ.பி.ஓ., முழுதுமாக ஆபர் பார் சேல் அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது. இதன் வாயிலாக, என்.எஸ்.இ.,யின் 6 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஐ.பி.ஓ., 2024ஆம் ஆண்டு ஹூண்டாய் மோட்டார் இந்தியா வெளியிட்ட 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ., சாதனையை முறியடித்து, நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக பதிவாக உள்ளது.
மேலும், தன்னாட்சி விதிமுறைகளின்படி ஒரு பங்கு சந்தை தன்னைத்தானே தனது தளத்தில் பட்டியலிட முடியாது என்பதால், என்.எஸ்.இ., பங்குகள் அதன் போட்டி நிறுவனமான மும்பை பங்கு சந்தை (பி.எஸ்.இ.,) தளத்தில் பட்டியலிடப்பட உள்ளன.

