உள்ளடக்கத்திற்கு செல்ல

கிரீஸில் இருந்தும் யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பலாம்
கிரீஸில் இருந்தும் யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பலாம்
ADDED : மே 25, 2026 01:52 AM

அ நிறம் | அளவு
தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் (என்.பி.சி.ஐ.,) சர்வதேச பிரிவு மற்றும் கிரீஸ் நாட்டின் 'யூரோ பேங்க்' இணைந்து, 'யு.பி.ஐ.,' வாயிலாக இந்தியாவுக்கு குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளன.
இது குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கிரீஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், யூரோ பேங்க் வங்கி கணக்கை பயன்படுத்தி இந்தியாவுக்கு நேரடியாக பணம் அனுப்ப முடியும்.
இதற்கு குறைந்த செயல்பாட்டு கட்டணமே வசூலிக்கப்படும்.
2024ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தற்போது இந்த சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
யூரோ பேங்க், இந்தியாவில் தனது முதல் கிளையை விரைவில் தொடங்க உள்ளது.
