/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
17 கோடியை தாண்டிய டிமேட் கணக்குகள்
/
17 கோடியை தாண்டிய டிமேட் கணக்குகள்
ADDED : செப் 06, 2024 02:50 AM

புதுடில்லி:இந்தியாவில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட்ட 42.30 லட்சம் புதிய டிமேட் கணக்குகளைத் தொடர்ந்து, நாட்டின் டிமேட் கணக்குகள் எண்ணிக்கை, முதல்முறையாக 17 கோடியை தாண்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
முந்தைய மாதமான ஜூலையில், ஆகஸ்டை விட சற்று அதிகமாக 44.44 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டிருந்தன.
இருப்பினும், கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட்ட 31 லட்சம் கணக்குகளை விட, கடந்த ஆகஸ்டில் இது அதிகம்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மொத்த டிமேட் கணக்குகள் எண்ணிக்கையில், இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இந்த எண்ணிக்கையானது, ரஷ்யா, எத்தியோப்பியா, மெக்சிகோ மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகமாகவும்; வங்கதேச மக்கள் தொகை எண்ணிக்கைக்கு நெருக்கமாகவும் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 16 கோடியை எட்டிய இரண்டே மாதத்தில், இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை கண்டு உயர்ந்து வருவதால், பங்கு முதலீட்டில் சிறு முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதே, இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
புதிய டிமேட் கணக்குகள்
44,44,000
2024 ஜூலை
42,30,000
2024 ஆகஸ்ட்
3,18,00,000
2024 ஜன - ஆகஸ்ட்
3,10,00,000
2023 ஜன - ஆகஸ்ட்