sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

'செபி' தலைவர் மீது புதிய புகார்

/

'செபி' தலைவர் மீது புதிய புகார்

'செபி' தலைவர் மீது புதிய புகார்

'செபி' தலைவர் மீது புதிய புகார்


ADDED : ஆக 16, 2024 11:30 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:'செபி' அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், விதிகளை மீறி, 2017 - 2022 ஆண்டுகளுக்கு இடையில் தன் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வாயிலாக, 3.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக, புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'அதானி' குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக, ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால், இவையனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது 'ராய்ட்டர்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2017ம் ஆண்டு 'செபி'அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்த மாதவி புரி புச், கடந்த 2022ல் செபி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார்.

கடந்த, 2017 முதல் 2022ம் ஆண்டு வரை, 'அகோரா அட்வைசரி பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை வைத்திருந்த அவர், 3.71 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளார்.

பதிவாளரிடம் தாக்கல் செய்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

'செபி' விதிகளின்படி, அலுவலக முழுநேர உறுப்பினர்கள், வேறு தொழில்முறை நடவடிக்கையில் இருந்து சம்பளமோ, ஆதாயமோ பெற தடை உள்ளது.

ஆனால், மாதவியின் நடவடிக்கை, இந்த விதிகளுக்கு மாறாக இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us