sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஆகஸ்டில் பங்கு வெளியீடு திரண்டது ரூ.17,000 கோடி

/

ஆகஸ்டில் பங்கு வெளியீடு திரண்டது ரூ.17,000 கோடி

ஆகஸ்டில் பங்கு வெளியீடு திரண்டது ரூ.17,000 கோடி

ஆகஸ்டில் பங்கு வெளியீடு திரண்டது ரூ.17,000 கோடி


ADDED : செப் 05, 2024 03:26 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சமீபகாலமாக புதிய பங்கு வெளியீடுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதம் மட்டும், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக பத்து நிறுவனங்கள் 17,047 கோடி ரூபாய் திரட்டியுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு, கடந்த மாதம் தான் அதிகபட்சமாக புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 17,047 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

இதில் 57 சதவீதம், அதாவது 9,715 கோடி ரூபாய், புதிய பங்கு வெளியீடு வாயிலாகவும்; மீதமுள்ள 7,332 கோடி ரூபாய் பங்குதாரர்களின் பங்கு வெளியீடு வாயிலாகவும் திரட்டப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இதுவரை, புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 56 நிறுவனங்கள் 65,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில், மொத்தம் 20 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் 15,051 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.

பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த மாதம் மட்டும் 25 நிறுவனங்கள் 'செபி'யிடம் விண்ணப்பித்துள்ளன.

நடப்பாண்டில் இதுவரை விண்ணப்பித்த நிறுவனங்கள் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில், 120 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கடுத்து இதுவே அதிகமாகும்.

திரட்டப்பட்ட நிதி

ரூ.17,047 கோடி

ஆகஸ்டில் மட்டும்

ரூ.65,000 கோடி

நடப்பாண்டில் இதுவரை

விண்ணப்பித்த நிறுவனங்கள்

25 ஆகஸ்டில் விண்ணப்பித்தவை

92 நடப்பாண்டில் இதுவரை விண்ணப்பித்தவை

விண்ணப்பித்த நிறுவனங்கள்

என்ன காரணம்?


பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் பங்குகளின் விலை உயர்ந்து காணப்படுவதால், முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீட்டின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். மேலும், பெரும்பாலான நிறுவனங்களின் புதிய பங்குகள், லாபத்துடன் பட்டியலிடப்படுவதால், குறுகிய காலத்தில் லாபம் கருதி, முதலீட்டாளர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மந்தமாக இருந்த புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை, தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.








      Dinamalar
      Follow us