
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 425 புள்ளிகள் குறைந்து, 75,311 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 117 புள்ளிகள் குறைந்து, 22,796 புள்ளியாக இருந்தது. ஆட்டோ துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன.
வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றது, ரூபாயின் பலவீனம், பங்குகளின் மிகை மதிப்பீடு, இறக்குமதி வரி உள்ளிட்ட அச்சங்கள் முதலீட்டாளர் மத்தியில் தாக்கம் செலுத்தின. ஆசிய சந்தைகளை விட இந்திய சந்தை செயல்பாடு குறைவாக இருந்தது.

