ADDED : ஏப் 03, 2024 11:11 PM

வணிக பயன்பாட்டுக்கான, நாட்டின் முதல் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கை, கர்நாடகாவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வினியோகத் தடங்கல்களால் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டில் கச்சா எண்ணெய் கிடங்குகளை உருவாக்கி, அதனை செயல்படுத்த, மத்திய அரசால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் ஐ.எஸ்.ஆர்.பி.எல்., என்னும் 'இந்தியன் ஸ்ட்ராடெஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ்' நிறுவனமாகும்.
தற்போது இந்நிறுவனம், கர்நாடகாவின் படூரில், 25 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட நிலத்தடி சேமிப்பு கிடங்கை அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே, ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் படூரில், மொத்தம் 53 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மூன்று நிலத்தடி சேமிப்பு கிடங்குகளை அமைத்துள்ளது. எனினும் இவை அனைத்தும் வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்காக அமைக்கப்படவில்லை. தற்போது கட்டப்பட உள்ள கிடங்கு தான் முதன் முதலாக வணிக நோக்கத்துக்காக அமைக்கப்படுகிறது.

