ADDED : அக் 10, 2024 10:19 PM

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சற்று உயர்வுடன் நிறைவடைந்தன.
• வர்த்தகத்தின் ஆரம்பத்தில் குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. அதன் பிறகு, ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தமாகின. நேற்றைய வர்த்தக நேரத்தின்போது, நிப்டி 0.60 சதவீதம் அதிகரித்து, 25,134 புள்ளிகள்; சென்செக்ஸ் 0.65 சதவீதம் அதிகரித்து 82,002.85 புள்ளிகள் வரை உயர்வு கண்டன.
• நிப்டி குறியீட்டில், வங்கிகள், நிதி நிறுவனங்கள், உலோகம் தவிர்த்து பெரும்பாலான துறை பங்குகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் மதிப்பு 1.84 சதவீதம் வீழ்ச்சி கண்டன.
• டி.சி.எஸ்., நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள், அமெரிக்க பணவீக்கம் தொடர்பான தரவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். இதன் தாக்கம், இன்றைய வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று,-- ------------ கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.87 சதவீதம் அதிகரித்து, 77.85 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து, 83.97 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
கோட்டக் வங்கி
ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல்
எச்.டி.எப்.சி.,வங்கி
பெல்
இண்டஸ்இண்ட் வங்கி
அதிக இறக்கம் கண்டவை
சிப்லா
டெக் மஹிந்திரா
டிரென்ட்
சன் பார்மா
இன்போசிஸ்