sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

கருப்பு திங்கள்: கலங்கடித்த பங்கு சந்தை

/

கருப்பு திங்கள்: கலங்கடித்த பங்கு சந்தை

கருப்பு திங்கள்: கலங்கடித்த பங்கு சந்தை

கருப்பு திங்கள்: கலங்கடித்த பங்கு சந்தை

1


UPDATED : ஏப் 08, 2025 12:09 AM

ADDED : ஏப் 07, 2025 11:17 PM

Google News

UPDATED : ஏப் 08, 2025 12:09 AM ADDED : ஏப் 07, 2025 11:17 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், நேற்று, ஒரே நாளில் கடும் வீழ்ச்சியை கண்டன. இந்தியாவில் மட்டுமின்றி; உலக சந்தைகளும் சரிவில் சிக்கின. கடந்த 1987 அக்டோபர் 19ம் தேதி, அமெரிக்க சந்தைகள் கடுமையாக சரிந்ததும், அன்றைய தினம் 'கருப்பு திங்கள்' என வரலாற்றில் குறிப்பிடப்பட்டது. அது போல ஒரு கருப்பு திங்களாக அமைந்தது, நேற்றைய தினம்.

வீழ்ச்சிக்கான காரணங்கள்


1 உலகளாவிய சந்தை வீழ்ச்சி


அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய பரஸ்பர வரிவிதிப்பு, ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி உள்ளது. இதனால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக அஞ்சி, முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்று வெளியேறினர். அமெரிக்க பங்குச் சந்தைகள் 6 சதவீதமும், சீன பங்குச் சந்தைகள் 10 சதவீதமும், ஜப்பான் பங்குச் சந்தை 8 சதவீதமும் வீழ்ச்சி கண்டன. இவற்றோடு ஒப்பிடுகையில், இந்திய சந்தைகள் 4 சதவீத வீழ்ச்சியே கண்டுள்ளன.

2 வர்த்தக போர் பதற்றம்


அமெரிக்க பரஸ்பர வரி விதிப்புக்கு, சீனா முதல் நாடாக 34 சதவீத வரி விதித்து, பதிலடி அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய யூனியன் உள்பட பிற நாடுகளும் வரி விதிப்பை கையில் எடுத்தால், வர்த்தகப் போர் சூழலுக்கு அது இட்டுச் செல்லும் என்ற கவலை அதிகரித்துள்ளது.

3 கச்சா எண்ணெய் விலை சரிவு


பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக தேவை குறையும் என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த ஒரு வாரத்தில் பேரலுக்கு 10 டாலர் வரை குறைந்துள்ளது. அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இது சாதகம் என்றாலும், ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபம் குறையும் என்பதால், அவற்றின் பங்கு விலை சரிவை கண்டன.

4அன்னிய முதலீடு வெளியேற்றம்


இந்திய சந்தைகளில் இருந்து அன்னிய முதலீடு வெளியேறுவது மீண்டும் கவலையளிக்க கூடியதாக மாறி உள்ளது. டிசம்பர் மாத தொடர் வெளியேற்றத்துக்கு பின், கடந்த மாதம் தான் அன்னிய முதலீடுகள் மீண்டும் வர துவங்கின. இந்நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 13,730 கோடி ரூபாய் அளவுக்கு, பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர்.

5 முன்னெச்சரிக்கை நடவடிக்கை


ஆர்.பி.ஐ.,யின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவு நாளை வெளியாக உள்ளது. மேலும், நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் குறித்த அறிக்கைகளும் வெளியாக உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.

w

தொழிலதிபர் இழப்பு (ரூ.கோடியில்)முகேஷ் அம்பானி 25,500கவுதம் அதானி 25,500சாவித்ரி ஜிண்டால் 18,700ஷிவ் நாடார் 12,750



நேற்றைய வீழ்ச்சியால் இந்திய கோடீஸ்வரர்களுக்கு ஏற்பட்ட இழப்பு

Image 1402772

நிப்டி

முந்தைய முடிவு: 22,904.45நேற்றைய முடிவு: 22,161.60மாற்றம்: 742.85 இறக்கம் சிவப்புசென்செக்ஸ்முந்தைய முடிவு: 75,364.69நேற்றைய முடிவு: 73,137.90மாற்றம்: 2226.79 இறக்கம் சிவப்பு

Image 1402769

அன்னிய முதலீடு:

அன்னிய முதலீட்டாளர்கள் 9,040 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர். கச்சா எண்ணெய்:உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 3 சதவீதம் குறைந்து, 63.23 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு:அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 பைசா குறைந்து, 85.84 ரூபாயாக இருந்தது.



Image 1402770

முந்தைய மோசமான வீழ்ச்சிகள்

1992 பங்குச்சந்தையில் செயற்கையாக பங்குகளின் விலையை ஏற்றி மோசடி செய்த ஹர்ஷத் மேத்தா குறித்த செய்தி வெளியானதால், பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டது. 2001மும்பையைச் சேர்ந்த பங்கு தரகரான கேதன் பரேக் 'ப்ரன்ட் ரன்னிங்' என்ற முறையில், குறுகிய காலத்தில் பங்குகளை விற்று செய்த மோசடியால் சந்தை வீழ்ச்சி கண்டது.2004லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இதனால், மே 17ல், நிப்டி 12 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இரண்டாவது மிகப்பெரிய வீழ்ச்சி இது. 2008உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக, ஒரே நாளில் நிப்டி குறியீடு 12 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டது. சந்தை குறியீடு மீட்சியடைய கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆனது.2020கொரோனா தொற்று காரணமாக மார்ச் 23ல், நிப்டி 13 சதவீதம் வீழ்ச்சி கண்டது. சந்தை சந்தித்த மோசமான வீழ்ச்சி இதுவாகும். கிட்டத்தட்ட 8 மாதத்துக்குப் பிறகே மீட்சி கண்டது.








      Dinamalar
      Follow us