/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பருத்தி நுாலிழை ஏற்றுமதி சரிவு
/
பருத்தி நுாலிழை ஏற்றுமதி சரிவு
UPDATED : ஜூலை 23, 2025 07:57 AM
ADDED : ஜூலை 22, 2025 10:43 PM

திருப்பூர்: சர்வதேச சந்தையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், பருத்தி பஞ்சு விலை அதிகமாக இருப்பதால், கடந்த மூன்று மாதங்களில் பருத்தி நுாலிழை மற்றும் துணி ஏற்றுமதியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
பஞ்சு விலை உயர்வு:
சர்வதேச சந்தையில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு கேண்டி பஞ்சு 56,800 -57,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பாதிப்பு
* பஞ்சு விலை உயர்வு காரணமாக பருத்தி நுாலிழை, பருத்தி துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது.
*செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும் மந்தமாகியுள்ளது.
*விலை வேறுபாடு இந்திய நுாற்பாலை உரிமையாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் சவாலாக உள்ளது.

