/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.4,900 கோடி திரட்டுகிறது பிராக்டல் அனலிட்டிக்ஸ்
/
ரூ.4,900 கோடி திரட்டுகிறது பிராக்டல் அனலிட்டிக்ஸ்
ADDED : ஆக 17, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பிராக்டல் அனலிட்டிக்ஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 4,900 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.
இதில், முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக, 3,620.70 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 1,279.30 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது. ஆமதாபாத் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த 5 பட்டதாரிகளால், கடந்த 2000ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 2022ல் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய ஏ.ஐ., நிறுவனம் என்ற சிறப்பை பெற்றது.