/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிவகங்கையில் 'மினி டைடல் பார்க்'; கட்டுமான பணிக்கு அரசு 'டெண்டர்'
/
சிவகங்கையில் 'மினி டைடல் பார்க்'; கட்டுமான பணிக்கு அரசு 'டெண்டர்'
சிவகங்கையில் 'மினி டைடல் பார்க்'; கட்டுமான பணிக்கு அரசு 'டெண்டர்'
சிவகங்கையில் 'மினி டைடல் பார்க்'; கட்டுமான பணிக்கு அரசு 'டெண்டர்'
ADDED : மார் 09, 2024 08:04 PM

சென்னை:தமிழகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில், 'மினி டைடல் பார்க்' கட்டும் பணிக்கு, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.
ரூ.70 கோடி
சென்னை மற்றும் அதன் புறநகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால், பலரும் வேலைக்காக சென்னை வருகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை மாநிலம் முழுதும் விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, இரண்டாம், மூன்றாம் நகரங்களில் மினி டைடல் பார்க் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது, 50,000 சதுர அடி முதல், 1 லட்சம் சதுர அடி வரை கொண்டவையாக இருக்கும். இந்தாண்டில், சிவகங்கை, நாமக்கல் மாவட்டங்களில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மினி டைடல் பார்க் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதில் தற்போது, காரைக்குடி தாலுகாவில் உள்ள கழனிவாசலில், 35 கோடி ரூபாய் செலவில், மினி டைடல் பார்க் கட்டடம் கட்டுவதற்கு, டைடல் பார்க் நிறுவனம் டெண்டர் கோரிஉள்ளது.
திட்டம்
அங்கு, தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை துவக்கி, அடுத்த ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த கட்டடம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படும்.

