/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தரவுகளுக்காக தவமிருக்கும் முதலீட்டாளர்கள்
/
தரவுகளுக்காக தவமிருக்கும் முதலீட்டாளர்கள்
ADDED : டிச 12, 2024 01:27 AM

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தன
• உலகளாவிய சந்தை போக்குகளுக்கு மாறாக, ஆசிய சந்தைகளின் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின.
• கடந்த நவம்பர் மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் தொடர்பாக தரவுகள் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் மிகவும் நிதானம் காட்டினர். இதனால், சந்தை குறியீடுகள் இரண்டாவது நாளாக சிறிய உயர்வுடன் முடிவடைந்தன
• நிப்டி குறியீட்டில் நுகர்பொருட்கள், வாகனம் மற்றும் ஐ.டி., ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் ஓரளவு உயர்வு கண்டன. பொதுத்துறை வங்கி, ஊடகம், எனர்ஜி, வங்கி துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் இறக்கம் கண்டன.
• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 2,144 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,839 நிறுவன பங்குகள் குறைந்தும்; 113 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---1,012 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.98 சதவீதம் அதிகரித்து, 72.90 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 84.84 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
டிரென்ட்
பஜாஜ் பைனான்ஸ்
பிரிட்டானியா
ஸ்ரீராம் பைனான்ஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
அதிக இறக்கம் கண்டவை
ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல்
அதானி போர்ட்ஸ்
என்.டி.பி.சி.,
எஸ்.பி.ஐ.,
ஆக்ஸிஸ் வங்கி