sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

இந்தியாவில் முதலீடு: இத்தாலி நிறுவனங்கள் உறுதி

/

இந்தியாவில் முதலீடு: இத்தாலி நிறுவனங்கள் உறுதி

இந்தியாவில் முதலீடு: இத்தாலி நிறுவனங்கள் உறுதி

இந்தியாவில் முதலீடு: இத்தாலி நிறுவனங்கள் உறுதி


ADDED : ஜூன் 06, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலின் இத்தாலி பயணத்தின் போது, பல்வேறு பெருநிறுவனங்கள் இந்தியாவில் கூடுதல் முதலீடு மற்றும் விரிவாக்கம் செய்ய உறுதி அளித்து உள்ளன.

இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்ப்பது குறித்து பேச்சு நடத்த, வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், இத்தாலி பயணம் மேற்கொண்டார்; அங்கு, முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து, இந்தியாவில் ஏற்கனவே செயல்படும் இத்தாலி நிறுவனங்கள் பலவும், தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய விருப்பம் தெரிவித்தன. காராரோ குழுமம் இந்தியாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில், 35 கோடி யூரோ முதலீடு செய்து ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக உறுதியளித்தது.

ஏற்கனவே தங்கள் நிறுவனம் 20 கோடி யூரோ முதலீட்டில் ஆலையை அமைத்து, 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

தெர்மல் மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனமான யு.எப்.ஐ., பில்டர்ஸ், இந்தியாவில் தன் முதலீட்டை இரு மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவித்தது. உற்பத்தி, வினியோக தொடரில் இந்தியா மிகவும் சாதகமான நாடாக இருப்பதாக அது கூறியுள்ளது.

இத்தாலி உணவு நிறுவனமான டாய்ச்சி விக்னோலா, இந்தியாவில் தன் வணிகத்தை விரிவுபடுத்த இருப்பதாக அமைச்சர் பியுஷ் கோயலிடம், அந்நிறுவன சி.இ.ஓ., ஸ்டெபனோ டாய்ச்சி தெரிவித்தார்.

மேலும் பல நிறுவனங்களின் உயரதிகாரிகளும் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய இருப்பதாக அமைச்சரிடம் உறுதியளித்தனர்.






      Dinamalar
      Follow us