/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எட்டு மாத உச்சத்தில் தயாரிப்பு துறை வளர்ச்சி
/
எட்டு மாத உச்சத்தில் தயாரிப்பு துறை வளர்ச்சி
ADDED : ஏப் 02, 2025 11:45 PM

புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில், எட்டு மாத உச்சத்தை எட்டியுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்து உள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.
மார்ச் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
தயாரிப்பு துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மார்ச் மாதத்தில் 58.10 புள்ளிகளாக அதிகரித்து, எட்டு மாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இது 56.30 புள்ளிகளாக இருந்தன.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும்.
நிறுவனங்களின் புதிய ஆர்டர்கள் அதிகரித்ததும், வலுவான தேவையுமே கடந்த மாத வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.