
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.பி.ஓ., வருகிறது ஓரியன்ட் கேபிள்ஸ்
டில்லியை தலைமையிடமாக கொண்டு நெட்வொர்க்கிங் கேபிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஓரியன்ட் கேபிள்ஸ் நிறுவனம், 700 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட , புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. முதலீட்டாளர் வசமுள்ள பங்குகளை விற்பனை வாயிலாக 380 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 320 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதில், 91.50 கோடி ரூபாயை இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கும், 155.50 கோடி ரூபாயை கடன்களை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளது.