/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சரக்கு வர்த்தக பற்றாக்குறை டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பு
/
சரக்கு வர்த்தக பற்றாக்குறை டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பு
சரக்கு வர்த்தக பற்றாக்குறை டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பு
சரக்கு வர்த்தக பற்றாக்குறை டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பு
ADDED : ஜன 16, 2026 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியாவின் சரக்கு வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி கிட்டத்தட்ட நிலையாக இருந்தபோதிலும், இறக்குமதி அதிகரித்ததே பற்றாக்குறை உயர காரணமாக அமைந்து உள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டு உள்ள தரவுகளின்படி, கடந்த மாதம் ஏற்றுமதி 1.80 சதவீதமும்; இறக்குமதி 8.70 சதவீதமும் அதிகரித்துள்ளது.
வளர்ச்சி தொடர்கிறது பல்வேறு சவால்கள் நிலவும்போதிலும், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி பாதையிலேயே தொடர்கிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையிலும், அந்நாட்டுக்கான ஏற்றுமதியில் பெரிய பாதிப்பில்லை. சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா, ஹாங்காங் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி 76.50 லட்சம் கோடி ரூபாயை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. - ராஜேஷ் அகர்வால், செயலர், மத்திய வர்த்தக துறை

