/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு
/
முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு
ADDED : டிச 13, 2024 01:12 AM

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன
• உலகளாவிய சந்தை குறியீடுகள் கலவையாக இருந்த நிலையில், ஆசிய சந்தைகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் சிறிய ஏற்றத்துடன் துவங்கின
• சில்லரை பணவீக்க தரவுகள் குறித்த முன்னெச்சரிக்கையால், 'ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்றதால், சந்தை குறியீடுகள் சரிவு பாதைக்கு சென்றன
• நிப்டி குறியீட்டில் ஐ.டி., உலோகம் தவிர, அனைத்து துறைகளும் சரிவைக் கண்டன. நுகர்பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, வாகனம், பொதுத்துறை வங்கி துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் இறக்கம் கண்டன
• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 1,479 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 2,518 நிறுவன பங்குகள் குறைந்தும்; 108 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,560 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.30 சதவீதம் அதிகரித்து, 73.74 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 84.87 ரூபாயாக சரிந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
அதானி என்டர்பிரைசஸ் பார்தி ஏர்டெல்
இண்டஸ்இண்ட் பேங்க்
டெக் மஹிந்திரா
அதானி போர்ட்ஸ்
அதிக இறக்கம் கண்டவை
என்.டி.பி.சி.,
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
கோல் இந்தியா
ஹீரோ மோட்டோகார்ப்
பி.பி.சி.எல்.,