/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சந்தையில் நீடித்த ஊசலாட்டம்
/
சந்தையில் நீடித்த ஊசலாட்டம்
ADDED : டிச 25, 2024 01:48 AM

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் சிறிய இறக்கத்துடன் நிறைவடைந்தன
• நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, இந்திய சந்தை குறியீடுகள் ஊசலாட்டத்துடன் துவங்கின. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு, பிற்பகல் வரை சந்தை சிறிய ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. பிற்பகல் வர்த்தகத்தின் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், முடிவில் சிறிய இறக்கத்துடன் முடிவடைந்தன
• நிப்டி குறியீட்டில் நுகர் பொருட் கள், எண்ணெய் மற்றும் எரி வாயு, வாகனத்துறை தவிர, அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு களும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு ஒரு சதவீதமும்; பொதுத்துறை வங்கி, தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 0.5 சதவீதமும் இறக்கம் கண்டன
• மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில், 2,023 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,972 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 97 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின
• கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,454 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.62 சதவீதம் அதிகரித்து, 73.08 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 85.20 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
டாடா மோட்டார்ஸ்
அதானி என்டர்பிரைசஸ்
ஐச்சர் மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
பி.பி.சி.எல்.,
அதிக இறக்கம் கண்டவை
பவர் கிரிட்
ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்
எஸ்.பி.ஐ.,லைப்
டைட்டன்
இன்போசிஸ்