/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பெருநிறுவன பங்குகளால் உயர்வு
/
பெருநிறுவன பங்குகளால் உயர்வு
ADDED : டிச 03, 2024 11:31 PM

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ந்து மூன்றாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் உயர்வு கண்டன
• உலக சந்தை நிலவரங்களின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்ந்தன. அதானி, ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி போன்ற பெரு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில், முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் புள்ளிகள் உயர்வு கண்டன
• நிப்டி குறியீட்டில், நுகர்வோர் பொருட்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களை தவிர்த்து, அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. பொதுத்துறை வங்கிகள், ஊடகம் சார்ந்த நிறுவனங்களின் குறியீடு, கிட்டத்தட்ட 2.5 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டது
• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், 2,738 நிறுவன பங்குகள் அதிகரித்தும்; 1,227 நிறுவன பங்குகள் சரிந்தும்; 102 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று--- 3,665 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.13 சதவீதம் உயர்ந்து, 72.64
அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து, 84.69 ரூபாய்
என்ற அளவுக்கு இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
அதானி போர்ட்ஸ்
என்.டி.பி.சி.,
அதானி என்டர்பிரைசஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
எஸ்.பி.ஐ.,
அதிக இறக்கம் கண்டவை
பார்தி ஏர்டெல்
ஹீரோ மோட்டோகார்ப்
ஐ.டி.சி.,
எச்.டி.எப்.சி., லைப்
சன் பார்மா