ADDED : ஜூன் 04, 2026 05:26 AM

புதுடில்லி: நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஹெச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் விபரம்:
கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.80 புள்ளிகளாக இருந்த சேவைத்துறைக்கான பி.எம்.ஐ., குறியீடு, மே மாதத்தில் 59.80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்கு பின் பதிவான மிக அதிக வளர்ச்சியாகும். சரக்கு போக்குவரத்து, இ - காமர்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான வலுவான தேவையால் புதிய வணிக வாய்ப்புகள் அதிகரித்து விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.
முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு தேவையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனங்கள் தொடர்ந்து புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்த்தன. இதனிடையே, தயாரிப்பு மற்றும் சேவைத்துறைகளை உள்ளடக்கிய கூட்டு பி.எம்.ஐ., குறியீடு ஏப்ரலில் 58.20 புள்ளிகளிலிருந்து மே மாதத்தில் 59.30 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
