
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் லேசான இறங்குமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 55 புள்ளிகள் குறைந்து, 79,486 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 51 புள்ளிகள் குறைந்து, 24,148 புள்ளியாக இருந்தது.
வெளிநாட்டு நிதி தொடர் வெளியேற்றம், புளுசிப் பங்குகளில் சரிவு தாக்கம் செலுத்தின. முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றினர். மந்தமான நிதி நிலை முடிவுகளும் தாக்கம் செலுத்தின. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.