
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் லேசான இறங்கு முகத்துடன் முடிந்தது. ஐந்து நாள் தொடர் ஏறுமுகத்திற்குப் பின், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 57 புள்ளிகள் குறைந்து 81,709 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 31 புள்ளிகள் குறைந்து, 24,678 புள்ளியாக இருந்தது.
ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என அறிவித்தது, தாக்கம் செலுத்தியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறை கொண்டிருந்தாலும் வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.