/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை நிலவரம்: சிவந்து முடிந்தது வாரம்!
/
பங்கு சந்தை நிலவரம்: சிவந்து முடிந்தது வாரம்!
UPDATED : ஜூலை 26, 2025 06:32 AM
ADDED : ஜூலை 26, 2025 12:23 AM

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்றும், இந்திய பங்கு சந்தைகள்
இறக்கத்துடன் முடிவடைந்தன. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறுவதன்
காரணமாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்கு சந்தை குறியீடுகள்
சரிவுடன் துவங்கின.
ஆசிய, ஐரோப்பிய சந்தைகளில் நிலவிய பாதகமான
சூழல், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளித்தது ஆகிய
காரணங்களால், முதலீட்டாளர்கள் நிதி, ஐ.டி., மற்றும் எண்ணெய், எரிவாயு துறை
சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்றனர்.
இதனால்,
நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதம் அளவுக்கு இறக்கம் கண்டன. தொடர்ச்சியாக
இரண்டாவது நாளாக சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன. கடந்த 2024
அக்டோபருக்கு பிறகு, நீண்ட வாராந்திர சரிவை பதிவு செய்தது.
உலக சந்தைகள்
வியாழன்று அமெரிக்க சந்தைகள் கலவையுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை
பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய்
எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடனும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு
உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.
வீழ்ச்சிக்கு காரணங்கள்
* ஆசிய சந்தைகளில் நிலவிய பாதகமான சூழல்
* நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம்
* தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
நிப்டி: 24,837.00
மாற்றம்: 225.10 இறக்கம் சிவப்பு
சென்செக்ஸ்: 81,463.09
மாற்றம்: 721.08 இறக்கம் சிவப்பு
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
சிப்லா 3.17
எஸ்.பி.ஐ.,லைப் 2.07
அப்பல்லோ ஹாஸ்பிடல் 1.50
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
பஜாஜ் பைனான்ஸ் 4.81
ஸ்ரீராம் பைனான்ஸ் 3.64
இண்டஸ்இண்ட் வங்கி 2.64
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் கோடி ரூபாய்க்கு பங்குகளை இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.32 சதவீதம் அதிகரித்து, 69.40 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்து, 86.52 ரூபாயாக இருந்தது.