/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'வின்பாஸ்ட்' கார்: இம்மாதம் முன்பதிவு
/
'வின்பாஸ்ட்' கார்: இம்மாதம் முன்பதிவு
ADDED : ஜூன் 03, 2025 02:13 AM

புதுடில்லி : வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான 'வின்பாஸ்ட்', இந்தியாவில் அதன் கார்களுக்கான முன்பதிவுகளை இம்மாதம் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வின்பாஸ்ட், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 17,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்து, ஏற்கனவே 4,250 கோடி ரூபாய் செலவில் ஆலை அமைத்துள்ளது.
இந்நிலையில் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் தெரிவித்ததாவது:
வின்பாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் துவங்க உள்ளது. முன்பதிவு துவங்குவதற்கு முன்னதாக, ஷாப்பிங் மால், விமான நிலையம் ஆகிய இடங்களில் கார்கள் காட்சிப்படுத்தப்படும்.
ஆரம்பகட்டமாக, பிரீமியம் மின்சார கார் மாடல்களான வி.எப்., 6 மற்றும் வி.எப்., 7 மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட உள்ளன. பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனை துவங்கும். இந்த கார்களுக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்திய சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு, மலிவான விலையே நிர்ணயிக்கப்படும்.
தூத்துக்குடி ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக 1.50 லட்சமாக உயர்த்தப்படும். பின்னர் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மாநில அரசுக்கு அளித்த வாக்குறுதியின்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள், தமிழகத்தைச் சேர்ந்த 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதுதொடர்பாக ஏற்கனவே 400 மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

