sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., விதிகளில் மாற்றம்

/

 அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., விதிகளில் மாற்றம்

 அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., விதிகளில் மாற்றம்

 அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., விதிகளில் மாற்றம்


ADDED : டிச 18, 2025 01:42 AM

Google News

ADDED : டிச 18, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான பி.எப்.ஆர்.டி.ஏ., அரசு பணியில் இல்லாதவர்களுக்கான என்.பி.எஸ்., விதிகளில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. இதன் வாயிலாக, பணம் எடுப்பதிலும், வெளியேறுவதிலும் கூடுதல் வசதிகள் கிடைக்க உள்ளன.

அதன் முக்கிய அம்சங்கள்

* அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., திட்டத்தில் இணைந்த பிறகு, வெளியேறுவதற்கு இருந்த 5 ஆண்டு கட்டாய காத்திருப்பு காலம் நீக்கப்பட்டுள்ளது

* மொத்த சேமிப்பு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், முழு தொகையையும் ஒரே தவணையாக எடுத்து கொள்ள அனுமதி

* மொத்த சேமிப்பு 8 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால், 6 லட்சம் ரூபாயை மொத்தமாக எடுக்கலாம்; மீதமுள்ள தொகைக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

* மொத்த சேமிப்பு 12 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், 80 சதவீத தொகையை எடுத்து கொள்ளலாம்; மீதமுள்ள 20 சதவீத தொகை மட்டுமே ஓய்வூதிய தொகுப்பு நிதியாக மாற்றப்படும்

* சந்தாதாரர்கள் தற்போது 85 வயது வரை முதலீட்டை தொடரலாம். ஒருவர் 60 வயதானாலும் புதிதாக என்.பி.எஸ்., கணக்கை துவங்கலாம்.

* சந்தாதாரர், 60 வயது பூர்த்தியடைந்தாலோ அல்லது 15 ஆண்டுகள் திட்டத்தில் நீடித்தாலோ வெளியேற அனுமதி உண்டு

* இந்திய குடியுரிமையை துறப்பவர்கள், கணக்கை முடித்துவிட்டு மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்

* சந்தாதாரர் காணாமல் போனால், வாரிசுகளுக்கு இடைக்கால நிவாரணமாக, மொத்த முதலீட்டில் 20 சதவீத தொகை வழங்கப்படும்

* பகுதியளவு திரும்ப பெறாத, ஓய்வூதிய தொகுப்பு நிதியை தேர்வு செய்யாத சந்தாதாரர் உயிரிழந்தால், முழு தொகை யும் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்படும்

* அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டு லாக்-இன் காலம் தொடரும்; அவர்கள் முழு தொகையையும் திரும்ப பெறுவதற்கான வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us