sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

கடன் பத்திரங்கள் : சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை செபியின் முயற்சிக்கு வரவேற்பு கிடைக்குமா?

/

கடன் பத்திரங்கள் : சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை செபியின் முயற்சிக்கு வரவேற்பு கிடைக்குமா?

கடன் பத்திரங்கள் : சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை செபியின் முயற்சிக்கு வரவேற்பு கிடைக்குமா?

கடன் பத்திரங்கள் : சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை செபியின் முயற்சிக்கு வரவேற்பு கிடைக்குமா?


ADDED : நவ 25, 2025 12:10 AM

Google News

ADDED : நவ 25, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், ராணுவ வீரர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கலாம் என செபி தெரிவித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவே இந்த யோசனையை முன்மொழிந்துள்ளதாக செபி கூறியுள்ளது.

இந்நிலையில், கடன் பத்திரங்களை எங்கு வாங்கி விற்பது; வட்டி எவ்வளவு கிடைக்கும்; இதில் உள்ள ரிஸ்க் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எங்கு வாங்கலாம்?


*ரிசர்வ் வங்கியில் நேரடியாக கணக்கு துவங்கி, அரசு கடன் பத்திரங்களை வாங்கலாம்

*பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் வாங்கலாம்

*டிமேட், டிரேடிங் கணக்குகளை துவங்கி, கார்ப்பரேட் பாண்டுகளையும் வாங்கலாம்

*மியூச்சுவல் பண்டுகளில் டெப்ட் பண்டு அல்லது கில்ட் பண்டுகள் வாயிலாக வாங்கலாம்

l புதிதாக வெளியிடப்படும் கடன் பத்திரங்களை முதன்மை சந்தையில் வாங்கலாம்.

எப்படி விற்பது?


*என்.எஸ்.இ., அல்லது பி.எஸ்.இ., வாயிலாக விற்கலாம்

* முதிர்வு தேதிக்கு முன், அவற்றை வெளியிட்டவர்களிடம் திரும்ப விற்க முடியும்.

வட்டி விகிதம் என்ன?


*வட்டி விகிதம் நிலையாக இருக்காது

*அரசு கடன் பத்திரங்களுக்கு வட்டி விகிதம் குறைவு (பாதுகாப்பு சற்று அதிகம்)

*கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு வட்டி அதிகம் (ஆபத்தும் சற்று அதிகம்)

* கிரெடிட் ரேடிங்கில் 'ஏ' மதிப்பீட்டுக்கு மேல் உள்ளவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

ரிஸ்க் என்ன?


*வெளியிட்டவர் வட்டி அல்லது அசலை திருப்பிச் செலுத்த முடியாமல் போவது

*சந்தை வட்டி கூடினால், பத்திரத்தின் மதிப்பு குறைவது.

முதிர்வுக்கு முன் வெளியேறினால் என்ன ஆகும்?


* சந்தையின் வட்டி விகிதங்களை பொறுத்து லாபமோ, நஷ்டமோ ஏற்படலாம்

*கடன் பத்திரங்களை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் வெளியேற கட்ட ணம் இருந்தால் செலுத்த நேரிடும்.

சுரேஷ் பார்த்தசாரதி நிதி ஆலோசகர், பார்ட்னர், மை அசட்ஸ்
கன்சாலிடேஷன்.காம்



வங்கிகளுக்கும், கிரெடிட் டிபாசிட்டிற்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் அந்த முயற்சி பெருமளவில் வெற்றி பெறுமா என்று பார்க்க வேண்டும். அரசு கடன் பத்திரங்கள், 6.50 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே வட்டி வழங்கு கின்றன. ஆனால், அதிக அபாயம் இல்லாத முதலீடுகளுக்கு, அஞ்சல் அலுவலக திட்டங்கள், 8 சதவீதத்திற்கு மேலும் வட்டி கொடுக்கின்றன. எனவே, செபியின் முயற்சிக்கு பெரிய வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.@

@






      Dinamalar
      Follow us