sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 வேளாண் அல்லாத பிற கமாடிட்டி முன்பேர வணிகத்தை ஆராய குழு செபி தலைவர் தகவல்

/

 வேளாண் அல்லாத பிற கமாடிட்டி முன்பேர வணிகத்தை ஆராய குழு செபி தலைவர் தகவல்

 வேளாண் அல்லாத பிற கமாடிட்டி முன்பேர வணிகத்தை ஆராய குழு செபி தலைவர் தகவல்

 வேளாண் அல்லாத பிற கமாடிட்டி முன்பேர வணிகத்தை ஆராய குழு செபி தலைவர் தகவல்


ADDED : டிச 21, 2025 02:06 AM

Google News

ADDED : டிச 21, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளாண் பொருட்கள் அல்லாத பிற கமாடிட்டிகளின் முன்பேர வணிக பிரிவு குறித்து ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

கமாடிட்டி முன்பேர வணிக சந்தையில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பது பணப்புழக்கத்தை அதிகரிப்பதோடு, நஷ்டத்தை குறைக்க மேற்கொள்ளப்படும் இடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு சந்தைகளை மேலும் உகந்ததாக்கும். எனவே, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்பது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் விவாதித்து வருகிறோம்.

வேளாண் பொருட்கள் அல்லாத பிற கமாடிட்டிகளின் முன்பேர வணிகப் பிரிவு குறித்து ஆய்வு செய்ய, மிக விரைவில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழுக்கள் வழங்கும் பரிந்துரைகளைப் பொறுத்து தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தங்கத்தை பொறுத்தவரை இந்தியாவில் முன்பேர வணிகம், இ.டி.எப்., மற்றும் மின்னணு தங்க ரசீதுகள் என முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க பொருட்களில் மட்டுமே வர்த்தகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us