பி.எப்., அடிப்படை ஊதிய வரம்பு; அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
பி.எப்., அடிப்படை ஊதிய வரம்பு; அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஜன 09, 2026 11:04 AM
ADDED : ஜன 09, 2026 02:15 AM

ஊழியர்களின் பி.எப்., பங்களிப்புக்கான அதிகபட்ச அடிப்படை சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கும், இ.பி.எப்.ஓ., அமைப்புக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வரம்பு 2014 முதல் இன்னும் மாறாமல் இருப்பது, ஊழியர்களின் ஓய்வுகால சேமிப்பை பாதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தற்போது பி.எப்., பங்களிப்புக்கான அதிகபட்ச அடிப்படை சம்பள வரம்பு 15,000 ரூபாயாக உள்ளது.முன்னதாக 6,500 ரூபாயாக இருந்த அடிப்படை சம்பள வரம்பு, கடந்த 2014ம் ஆண்டு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

