ADDED : பிப் 26, 2026 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வே தாந்தா நிறுவனம் பங்குகளாக மாற்ற இயலா கடன் பத்திரங்களை வெளியிட்டு, அதன் வாயிலாக 3,000 கோடி ரூபாய் திரட்ட அந்நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் முக மதிப்பில், அதிகபட்சமாக 3 லட்சம் எண்ணிக்கையில் கடன் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த என்.சி.டி., களுக்கு வழங்கப்பட உள்ள வட்டி விகிதம் குறித்து, இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக, வேதாந்தா நிறுவன பங்கு ஒன்றின் விலையை, 480 ரூபாயிலிருந்து 840 ரூபாயாக உயர வாய்ப்புள்ளதாக, தரகு நிறுவனமான 'பி.ஓ.எப்.ஏ., செக்யூரிட்டிஸ்' தெரிவித்திருந்தது. நேற்று வர்த்தக முடிவில் இந்நிறுவன பங்கு 4.81 சதவீதம் உயர்ந்து 728.50 ரூபாய்க்கு நிறைவடைந்தது. நடப்பு ஆண்டின் முதல் 2 மாதங்களில் மட்டும் பங்கு விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

