ADDED : ஜன 19, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரி இனங்களை செலுத்தபுகழூர் கமிஷனர் அறிவுரை
கரூர்,:புகழூர் நகராட்சியில், பொதுமக்கள் தாமதம் இல்லாமல், வரி இனங்களை செலுத்த வேண்டும் என, கமிஷனர் ேஹமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், சேவைகளை செம்மைப்படுத்தவும், நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அகற்கு நகராட்சி வருவாய், முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, நகராட்சி கடை வாடகை உள்ளிட்ட, வரி இனங்களை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராத கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.