sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ சேதமடைந்த தண்டவாளத்தில்பராமரிப்பு பணி: டி.எஸ்.பி.,ஆய்வு

சேதமடைந்த தண்டவாளத்தில்பராமரிப்பு பணி: டி.எஸ்.பி.,ஆய்வு

சேதமடைந்த தண்டவாளத்தில்பராமரிப்பு பணி: டி.எஸ்.பி.,ஆய்வு


ADDED : ஜன 19, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 01:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேதமடைந்த தண்டவாளத்தில்பராமரிப்பு பணி: டி.எஸ்.பி.,ஆய்வு

கரூர்,:கரூர் அருகே, சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தில், பராமரிப்பு பணிகள் நேற்று நடந்தது.

கோவையில் இருந்து, கரூர் வழியாக நேற்று முன்தினம் காலை, 11:45 மணிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் ரயில்வே பாதையில், தான்தோன்றிமலை- வெள்ளியணை இடையே சென்று கொண்டிருந்தது.

அப்போது, தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்ட இரும்பு துண்டால், தண்டவாளம் சேதமடைந்தது. இதுகுறித்து, ரயில் டிரைவர் கொடுத்த தகவல்படி, தண்டவாளம் உடனடியாக சரி செய்யப்பட்டு, வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தின் பகுதி நேற்று காலை நீக்கப்பட்டு, 15 மீட்டர் அளவில் புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்தன. பராமரிப்பு பணிகளை, திருச்சி ரயில்வே கோட்ட டி.எஸ்.பி., சக்கரவர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கரூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், எஸ்.ஐ., மகேஸ்வரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us