sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பை விமான நிலைய ஓடுதளம் தொடர்ந்து 3வது நாளாக மூடல்

/

மும்பை விமான நிலைய ஓடுதளம் தொடர்ந்து 3வது நாளாக மூடல்

மும்பை விமான நிலைய ஓடுதளம் தொடர்ந்து 3வது நாளாக மூடல்

மும்பை விமான நிலைய ஓடுதளம் தொடர்ந்து 3வது நாளாக மூடல்


ADDED : செப் 04, 2011 11:00 PM

Google News

ADDED : செப் 04, 2011 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகி சகதியில் சிக்கி விபத்துக்குள்ளான, துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்கும் பணி நேற்றும் தொடர்ந்தது.

இதனால், விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம், மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தது.



துருக்கி நாட்டைச் சேர்ந்த துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம், கடந்த வெள்ளியன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது, திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி, சகதியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும், சகதியில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணிகள், கடந்த மூன்று நாட்களாக தொடர்கின்றன. இந்தப் பணிகளால், விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தது. விமான நிலைய செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், ''34 இன்ஜினியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சகதியில் சிக்கிய துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், விமான நிலையப் பணிகளில், எந்தப் பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும், வழக்கமான நேரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.








      Dinamalar
      Follow us