ADDED : ஜூலை 12, 2011 11:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறைத்துக்கொண்ட மத்திய ரயில்வே இணையமைச்சர் முகுல் ராயிடமிருந்து அப்பதவி பறிக்கப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வராக மம்தா பதவியேற்றுக்கொண்டதையடுத்து, தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பொறுப்பை பிரதமர் கூடுதலாக ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, கப்பல் துறை இணையமைச்சராக இருந்த திரிணமுல் கட்சியைச் சேர்ந்த முகுல்ராய்க்கு ரயில்வே இணையமைச்சர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அசாம் ரயில் விபத்து சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல முகுல்ராய்க்கு பிரதமர் <உத்தரவிட்டும், அங்கு செல்ல முகுல் மறுத்து விட்டார். இந்நிலையில், அவரிடமிருந்த ரயில்வே இணையமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, கப்பல் துறை இணையமைச்சர் பதவி மட்டும் தொடர்கிறது.

