ADDED : ஜூலை 17, 2011 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் உள்ள பாதாளஅறை குறித்து பொது நல வழக்கு தொடர்ந்த வக்கீல் சுந்தரராஜன் உடல்நலகுறைவு காரணமாக இறந்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள பத்பநாபசுவாமி கோயிலில் பாதாள அறைகள் இருப்பதாகவும் அவை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அதில் பொக்கிஷங்கள் இருக்ககூடும் எனவே அவற்றை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என வக்கீல் சுந்தரராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
மேலும் சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் சனிக்கிழமை உடல்நல குறைவு காரணமாக இறந்தார்.