UPDATED : ஆக 20, 2011 08:55 AM
ADDED : ஆக 20, 2011 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட பெண்களுக்கு மீண்டும் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு ஆபரேஷன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில குடும்பநலத்துறை அமைச்சர் பிரசன்னா ஆச்சார்யா சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த 2006-07-ம் ஆண்டு முதல் 2010-11 வரையிலான ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரத்து 369 பெண்கள் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்டனர். இவர்களில் சுமார் 531 பெண்களுக்கு மீண்டும் குழந்தை பிறந்துள்ளது. 236 பேர் பல்வேறு கம்பெனி இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர். மத்திய அரசின் குடும்பநல இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நிவாரணம் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

