UPDATED : ஆக 20, 2011 03:26 PM
ADDED : ஆக 20, 2011 09:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லோக்பால் மசோதா குறித்து தனியார் மற்றும் அமைப்புகளிடமிருந்து ஆலோசனை கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அபிஷேக் மானு சிங்வி தலைமையிலான பார்லிமென்ட் நிலைக்குழு இதற்கான ஆலோசனைகளை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக செய்திதாள்களில் விளம்பரம் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா தொடர்பாக செப்டம்பர் 4ம் தேதி வரை ஆலோசனைகளை தரலாம் எனவும், இதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பார்லிமென்ட் நிலைக்குழு அறிவித்துள்ளது.

