ADDED : செப் 01, 2011 07:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகரி: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியுடன், பாரதிய ஜனதாவுக்கு எந்தவித உறவும் கிடையாது.
இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை' என, பா.ஜ.,மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். திருப்பதி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், மேலும் கூறியதாவது:காங்கிரஸ் கட்சிக்கும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. பா.ஜ., கட்சியும், ஜெகன்மோகன் ரெட்டி கட்சியும், இப்போதல்ல, எதிர்காலத்திலும் இணைந்து செயல்படும் வாய்ப்பில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.